Tuesday 1 March 2011

என் காதலியே என்னை காதலிக்காதே

ஐந்து வருடங்கள்
கழிந்து
இன்று
அவளை
பார்த்த பொழுதுதான்
தெரிந்தது
என் காதல்
காதலோடு
முடிந்து போனததற்கு
காரணம்

அன்பான துணை
அழகான குழந்தை
அமைதியான இல்லம்
வளமையான வாழ்க்கை

சந்தோசத்தின்
உச்சத்தில்
நான்

நீ
இந்த
ஏழை கவிஞனின்
கை பிடித்திருந்தால்
அந்த
பாரதி கண்ணம்மாவாக
அரிசி பருப்பிர்க்குமே
அழுது
கொண்டிருந்திருப்பாய்

என் காதலியே
என்னை
காதலிக்காததற்கு
நன்றி

என் ஆண்டவனே
என் காதலியை
என்னை காதலிக்காமல்
செய்ததற்கு
நன்றி

உன்
சந்தோசத்தின்
உச்சம்தானடி
என்
காதலின்
மிச்சம்

அது போதும் - இந்த
ஆயுள் முழுதும்.............

No comments:

Post a Comment