Monday 29 August 2011

மையில்



நீ இருக்‌கிறாய் மையில் இறகாய்

நான் இருக்கிறேன் மண சிறையாய்

காதல் பூச்சி


நீ விடுதலை செய்கிறாய்
பட்டாம் பூச்சியை

என்னை  சிறையில் வைக்கிறாய்
வண்ணத்து பூச்சியாய்

உன்னையே சுற்றிவருகிறேன்
மின்மினி பூச்சியாய்.......


சே.காரல்மார்ஸ்

நீ நிலவா இல்லை ஓவியமா


நீ


நீ துங்குகிறாய் உன் எண்ணத்தைவிட்டு
நான் தவிக்கிறேன் என் நினைவுகளை விட்டு
என்னை தேடுகிறேன் காணவில்லை
உன்னை தேடுகிறேன்  மறையவில்லை . . .


சே.காரல்மார்க்ஸ்

Thursday 11 August 2011

Baby - 8

‌நீ  நினைக்கிறாய் உன் எதிர் கால கனவை
நான் நினைக்கிறேன் என் நிகழ்கால நினைவை
நீ  பார்க்கிறாய் உன் வாழ்வை
நான் தேடுகிறேன் என் வாழ்வை

கரை



சுனாமியில் கரை
தாண்டிய கடல்
ஒவ்வொரு நாளும்
வருத்தத்துடன்,
அலைகளில் அழுகிறது.
"இந்த பூமி நம்மை மன்னிக்குமா?"

-copy

பெண் பார்க்கும் கண்ணாடி

  http://cache.gawkerassets.com/assets/images/4/2010/09/saguaromoon_seip.jpg
 
நிலவுப் பெண்
முகம் பார்க்கும்
கண்ணாடி

கண்முன் நடமாடும் மனசும் அலைகளோடு துள்ளிக்குதிக்கும் கடலும்



கடல் எழுதும் கதை --------------------------

மனம் போல்
அழகான -
நீளமான கடல்.

கரை ஒதுங்கும்
அலையின் சில்லென்ற ஈரத்தில்
கால்வைத்து -
இதயம் நனைத்துப் பூக்கும்
நீலப் பூக்களுக்கிடையே..

கிரீச்
கிரீர்ச்சென்று கத்தாத,
பட்டாம்பூச்சிகளாய்
இறக்கை அடித்துப் பறந்திடாத,
மாறிமாறி வரும் அலைகளை
விண்ணைத் தொடும் சந்தோசத்தில்
தொட்டு தொட்டு - பூரித்த
கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே..

ஒரு கவிதை வேண்டி
கரை தாண்டி
மணல்மேட்டில் பதிந்த
கால்தடங்களை மணல்களில் களைந்துவிட்டு
அங்குமிங்குமாய் பார்க்கிறேன்
எனைவிடுத்து அத்தனையும்
கவிதைகளாய் பூத்துக் கிடந்தன.

பின் -
கண்முன் நடமாடும் மனசும்
அலைகளோடு துள்ளிக்குதிக்கும் கடலும்
விரிந்திருக்க -
எதை எழுதிக் கவிதையென்பேன்???

எத்தனையோ பேரின் வீட்டில்
அழுதிடாத அழையும்,
மனம்விட்டு வெளிவராத சிரிப்பும்,
பொங்கியெழுந்திடாத -
கோபத்தையும் சுமந்து தான்
கடல் -
இப்படிக் கொந்தளிக்கிறதோ..

மணலில் புகுந்து மிஞ்சிய
சிகரெட் துண்டுகளுக்குள்
புகுந்துள்ள எத்தனையோபேரின் கதைகளை
கடல் - தன் அலையும் தண்ணீரில்
எழுதி எழுதி கரைந்து போனதால் தான்
நீல நிறம் கொண்டு விட்டதோ..

காதலின் -
வெற்றியில் ஒதுங்கிக் கொண்டாலும்
தோல்வியில் பரிசளித்து
மரணத்தில் முடைந்துக் கொண்ட
எத்தனை காதலர்களின் பெருமூச்சோ
இந்த அலைகள்..

கடலை விற்பவனிலிருந்து
காதலர்களிடம் குறி சொல்பவளிலிருந்து
பூ விற்பவள் வரை - தன்
இல்லாத நாட்குறிப்பில் இருக்கும் விலாசம்
இந்த கடல்தானே..

கரைதொட்டு கடல்புகும்
அலைபோலவே
ஏதோ ஒன்றை தின்று உறங்கி எழுந்ததில்
எதையோ தொட்டுவிட்டதாகவே
ஆசையென்னும் ஆழத்தில் மூழ்கி மூழ்கி
கூரைவீட்டை தாண்டாத மீனவர்களுக்கு
எமனும் சிவனும்
இந்த ஒற்றை கடல் தானோ..

எல்லாம் தாண்டி
தனியே அமர்ந்து -
கடலையே வெறிக்கும்
எத்தனையோ பேருக்கு
இந்த கடலும் காலமும்
என்ன பதில் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை.

சற்று நேர அமைதியில்
சூரியன் சற்று சாய்ந்து
இருட்டிக் கொள்கையில் -
இவை எவையையுமே பதிவு செய்யாது
காகிதத்தை கசக்கி கடலில் வீசிவிட்டு
கேள்விகளையும் -
ஏதோ ஒரு கனத்தையும் மனதில் சுமந்தவனாய்
கரையையும் கடலையும் தாண்டி
நகர விளக்கின் வெளிச்சத்திற்குள்
புகுந்துக் கொள்கிறேன்.

கடல் -
என்னையும்
தன் அலைகளிடம் யாரேன்றுக் கேட்டு
தண்ணீரில் எழுதிக் கொள்ளும் போல்!

 
 
~வித்யாசாகர்~
 நன்றி
 

கரை



சுனாமியில் கரை
தாண்டிய கடல்
ஒவ்வொரு நாளும்
வருத்தத்துடன்,
அலைகளில் அழுகிறது.
"இந்த பூமி நம்மை மன்னிக்குமா?"

-copy

அலை



காற்றின் வெற்றிடத்தை
நிரப்பிச் செல்லும்
அலைகளிலாடும்

மெளனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge1eskKPQzFj_plg705kIvEyfDKfR9fYoVuZhplIcrC1XkOb4AuiXUMVHCOywWfhnptu2xYA39-DM8kxBcz1jMPNvaAYzFdCtXwNyN7-fV9PWr4UxgAaOGBFguRom2dL2eUVK9oLOSG7w/s400/girl_flowers-300.jpg

என் ஆழ்ந்த‌
மெள‌ன‌த்திற்குள்
அமிழ்ந்திருக்கின்ற‌ன‌
உன் ஆயிர‌ம்
கேள்விக‌ளுக்கான‌
ப‌தில்க‌ள்...

உன‌க்கென‌
ஒருவார்த்தையேனும்
நான் ப‌திலாய்க்கூற‌
எத்த‌னிக்கையில்
மெள‌ன‌ உல‌க‌த்தின்
அத்த‌னை வார்த்தைக‌ளும்
என்னை வெல்கின்ற‌ன‌...

ஒரு
மெள‌ன‌ப் புன்ன‌கையோடு
முடிகிற‌து
உன‌க்கான‌ என் ப‌தில்...

நீ தமிழும்

  http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS5Xo0MEyoSmss4fBMYPI3ep6M4Fzrjdys_NHuVjq7j4l_0RkLSnw


தமிழும்
இலக்கியமும்

கவிதையும்
கடற்கரையும்

கனவுகளும்
அது கலைக்கப்பட்ட‌
நிமிடங்களும்

எல்லாமும்
நீயும் நானும்...

 
 
- த‌னி (tani4kavi@gmail.com)
நன்றி

சிறகுகள் தாண்டி

http://mapme.canalblog.com/images/sad_butterfly_girl.jpg


கலைக்கப்படும் மெளனங்களிலும்
விதைக்கப்படும் மெளனங்களே
உன் அருகாமையில்
அழகு...

ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
ஆழ்ந்த மெளனத்தால் ம‌ட்டுமே
உன் அருகாமையை
எதிர்கொள்ள முடிகிற‌து...

உன்னில் என்னில்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizHfkCpUt3X-oDDdz5nJnUtV2ghomEkJ6nmA-l1KHTByIM4c36A4VnVBsJvXHEu9PwQWx_lcxKl4W2Luq6xDfK6VXaZ3DosFJAEqhtWVnNw3zW8AzKkCMi9I-WbKXRNeN90IcRhXZw4_Y/s1600/beautiful-colourfull-parrot-birds-desktop-wallpapers.jpg

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!
*
உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!
*
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
*
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
*
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
*

- ப்ரியன்.
நன்றி

என் காதல் கவிதைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghJF7ofVDvFDzWQtd47Bt3A1dRqL_euGF05LS5-_6wNWCWCfrBSY6U26GhP8mzkhgg1x-WUYogOD22EXVOah8MDRNzdzvU6qnKO95xVrfHqjKV-yJBa_psgtaaX-N8S2UEnOykEq2uUL-m/s1600/PCH12710.jpg

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்



-யாழ்_அகத்தியன்
நன்றி

காதல்


http://a3.idata.over-blog.com/300x225/3/15/22/98/love.jpg

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்காதல் கவிதைகள்!