Thursday 11 August 2011

என் காதல் கவிதைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghJF7ofVDvFDzWQtd47Bt3A1dRqL_euGF05LS5-_6wNWCWCfrBSY6U26GhP8mzkhgg1x-WUYogOD22EXVOah8MDRNzdzvU6qnKO95xVrfHqjKV-yJBa_psgtaaX-N8S2UEnOykEq2uUL-m/s1600/PCH12710.jpg

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்



-யாழ்_அகத்தியன்
நன்றி

No comments:

Post a Comment