Thursday 28 April 2011

பூக்களை வாடகைக்கு கேட்கிறாய்...

http://hiox.org/image.php?id=2919&sid=4838
 
பூக்களை 

வாடகைக்கு கேட்கிறாய் 

அது புன்னகை சிந்துமென்று 

பாவம் அது 

சிலநொடிப் பொழுதுகளில் 

துவண்டு விழுந்துவிடும் 




பூக்களோடு கரைந்து போவதே 

புன்னகையை காட்டிலும் 

அற்புதமானது 






பொழியும் பனித்துளிகள் 

பூவிதழ்களில் படிந்துகிடக்கையில் தான் அழகு 

உயிரோடத்துடனான 

உறவு அங்கே தான் 

ஜெனனமெடுக்கிறது



இரவோடு நிலவும் 

அதிகாலையில் பணியும் 

தனிமையில் மௌனமும் 

எவ்வளவு அற்புதமானதோ 

அதுவாகவே உன்னோடு நான் 






உரிமை கேட்கவில்லை 

என்னுனர்வை சொல்கிறேன் 

அவ்வளவு தான் 



என்னுயிர் கவிதையே 

என்னை இன்னும் 

காக்க வைப்பது என்ன நியாயம் 






இந்நொடியே

என்னை துறந்து 

உன்னில் கரைந்து போகிறேன் 



மரணத்தின் விளிம்பும் 

அமேசான் மழைகாடுகலானது 

ஆயிரமாயிரம் நட்சத்திரங்களுடன் 

நீயும் நானும் 

அங்கே உரையாடிக்கொண்டு இருக்கிறோம் 


நீ உதிர்க்கும் 

வார்த்தைகளில் 

சொக்கிப்போய் 

உனது மடியினிலேயே உறங்கிக்போனேன்...    
 
நன்றிhttp://madusudanrajkamal.blogspot.com

No comments:

Post a Comment