Tuesday 19 April 2011

மரித்து போகின்றேன்



கவிதைகள் எழுத ஆசையடி  உன்னை நினைத்து 
கண்ணீரை  விட்டு எழுதவா? இரத்தத்தை விட்டு எழுதவா ?
இரண்டுமே நீ பிரிந்த பொழுதில் வற்றிபோய்விட்டன ....
என்ன ஆனபோதும் என் மனதில் இருந்து நீ பிரியவில்லை ..
உன் மீது நான் கொண்ட பிரியமும் குறையவில்லை 
உன் அத்தனை காதல் நினைவுகளும்  என்னை சுடுகின்றது ..
நீ பிரியும் போது நான் இறந்துவிட்டேன் போல .....
சுடுகாட்டில் தீ தின்னும் உடலைப்போல் -உன் நினைவுகள் 
என்னை ஒவொரு நொடியிலும் சுட்டு தின்கின்றது .......
மறக்கச்சொன்னாய் ....மரித்து போகின்றேன் .......

No comments:

Post a Comment