Wednesday 27 April 2011

மே தின சிறப்புக் கட்டுரை - நன்றி 'தீக்கதீர் 27-04-10'

மரம் தனது கனிகளால் அறியப்படும்!
 
 
 
க.ராஜ்குமார்
மரம் தனது கனிகளால் அறியப்படும்! இந்த அமைதியான வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர்கள் ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித்துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒருவரான தோழர் ஆல்பர்ட் ஆர் பார்சன்ஸ் தன மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதியாக முழக்கமிட்ட வார்த்தை இது!
8 மணி நேரம் வேலைகேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீது , காவல்துறையினரை நோக்கி குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட ஸ்பைஸ் , ஜார்ஜ் எங்கெல் , அடல்ப் பிட்ஷேர் ,ஸ்வஹ்ப், சாமுவேல் பீல்டன் , லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது . ஆஸ்கார் நீபி என்ற தோழருக்கு 15வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது . இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது . ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வஹ்ப் மற்றும் பீல்டன் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பார்சன்ஸ் , ஸ்பைஸ் , ஏங்கெல் மற்றும் பிட்சர் ஆகியோர் 1887-ஆண்டு நவம்பர் மாதம் 11-ம தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லிங்க் என்ற தோழர் தன்னை தானே சிறையிலேயே மாய்த்துக்கொண்டார் .
இவர்கள் செய்த குற்றம் தான் என்ன ? தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அணி திரட்டியதுதான் . 1886 -ம ஆண்டு நவம்பர் மாதம் 1-ம தேதியன்று சிகாகோ நகரில் 40000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக காரமிக் ஹர்வேச்ட்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500- தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்ட் ஸ்பைஸ் உரையற்றிக்கொண்டுயிருந்தார் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்த இந்த கூட்டத்தை காவல்த்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர் . இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர் . கவல்த்துரைன் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு சிகாகோ நகரின் மையப்பகுதியில் ஹே மார்க்கெட் என்ற பகுதியில் கூட்டத்திற்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரிலிருந்து வெளியாகும் 'ஆர்ப்யட்டர் ஜெட்டங்' என்ற செய்தித்தாளில் ஆகஸ்ட் ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டன கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந்தார் அன்றிரவு நடைப்பெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டனர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் தலைவர்கள் , தோழர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ் ஆல்பர்ட் பர்சன்ஸ் சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர் . சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்த போது ஜான் போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில் 180 -க்கும் மேற்பட்ட காவல்த்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக களைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்த்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிர் இழந்தார். 70௦-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . காவல்த்துறையினர் உடனடியாக கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனை பேர் இறந்தனர், காயமுற்றனர் எனபது இறுதிவரை தெரிவிக்கப்படவே இல்லை .
இந்நிகழ்வை தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன . தொழிலாளர் தலைவர்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எரிந்தது தொழிலாளர்கள் தலைவர்கள்தான் என குற்றம் சாட்டப்பட்டு 8 தொழிலாளர்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப்பற்றி அந்நகர மேயர் கூறுகையில் மிகவும் அமைதியான முறையில் நடை பெற்றுக்கொண்டிருந்தது கூட்டம் . தொழிலாளர்கள் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டு இருந்தனர் காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பார்சன் தனது இரு சிறிய குழந்தைகளையும், அந்த கூட்டத்திற்கு அழைத்து சென்றிருந்தார் எனினும் தொழிலாளிகள் தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொழிலாளர்கள் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன் , சாமுவேல் பில்டேன் , ஆகியோர் மட்டும்தான். ஆனால் 8 தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மருத்துரைத்தனர் . தங்களின் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்கிடவே இந்த பொய் வழக்கு என எடுத்துரைத்தனர். அரசு வழக்குரைஞரோ தலைவர்கள் பின்னால் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் த்ரண்டதுதன் மிகப்பெரிய குற்றம் என்றும் தலைவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார்.
நீதிமன்றத்தில் மரணதண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டபின் ஆகஸ்ட் ஸ்பைஸ் இத்தகைய திர்ப்புகளால் தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது எங்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீப்பொறியாக கிளம்பி எங்கெங்கும் பரவி உரிமைக்கான போராட்டங்களாக கொழுந்து விட்டெரியும் என முழக்கமிட்டார்.
125 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கிவருகிறது.
------
-கட்டுரையாளர் முன்னாள் மாநிலத்தலைவர், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம்

No comments:

Post a Comment