Thursday 28 April 2011

தவமின்றி கேட்கிறன்


http://i5.tinypic.com/14ddnx1.jpg

இதயத்தில் ஒரு இனிய ராகம்

என்னை தாலாட்டும் மாலை நேரம்

மயக்கமாய் ஒரு நிலை வரும் காலம்

என்னுயிரே நெஞ்சிலே உந்தன் ஞாபகம்

மார்கழி பனிக்கலை பொழுதில்

உடலில் படும் சில்லென்ற காற்று

என்தேகம் தழுவி சிலிர்க்கும் பொழுதில்

தேவதையே மனதில் உந்தன் பூமுகம்

உன் கைபிடித்து நடக்க ஆசை குழந்தையாய்

உன் தோள்சாய்ந்து இருக்க ஆசை நண்பனாய்

உன் மார்போடு உறங்க ஆசை உன்னவனாய்

தவமின்றி கேட்கிறன் வரம் கொடு என்னுயிரே

No comments:

Post a Comment